*சிவன் இராஜ யோகம்*
சதாசிவனின் கட்டளைப்படி உருவாக்கப்பட்டதால் இவ்வியக்கம் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.
நான்மறை உண்மையும், நால்வகை யோகமும், தவமும், தாந்த்ரீகமும் இங்கு அவரவர் தன்மைக்கு ஏற்ப தரப்படுகிறது.
*குரு பாரம்பரியம்* :
சாட்சாத் சதாசிவனே இங்கு குருவாக இருக்கின்றார். அவரை நாங்கள் 'ஓம்காரநாதர்' என்றழைக்கிறோம்.
ஈசனின் வெளிப்பாடு தவப்பயன், புண்ணியப்பயனால் கிடைப்பது என்பதால் அதற்கு ஆயத்தப்படுத்த குருபிரதிநிதியாக ரிஷியோகி நியமிக்கப்பட்டுள்ளார்.
தவ, தாந்த்ரீகங்கள் அனைத்தையும் (அதாவது தசமகாவித்யா, விஷ்ணுகிரந்தா போன்ற உயரிய, உச்சகட்ட மிகவும் ஆபத்தான பல சாதனைகளை)கற்ற, பல சித்திகளையும் கைவரப் பெற்ற அவர் 'பிரஜாபதி' என்ற நிலையைப் பெற்றவராவார்.
'பிரஜாபதி' ரிஷியோகிக்கு உலகமாற்றத்திற்கு உதவுவதற்காக பகவான் ஓம்காரநாதர் 'சித்தர்' ஒருவரை இப்பூமியில் இறக்கியுள்ளார். அவரே உபகுருவாக உள்ளார். அவரை ' *சித்தர்ஜெய்* ' என்ற திருப்பெயரால் அழைக்கிறோம்.
*யோக வழிமுறை* ;
இங்கு யோகிகளின் யோகசக்தியும், பக்தர்கள் கடைபிடித்த இதயக்கமல தியானமும், தாந்திரீக யோகிகள் புரிந்த உபாசனைகளும், சித்தர்களின் தவமும் படிப்படியாக வழங்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிய வகையில் கடைபிடிக்க 'ஓம்காரநாதர் திருமந்திரம்' உபதேசிக்கப்படுகிறது.
இறைவனை அறிய, உணர நினைப்பவர்கள், அதற்கான தாகம் உள்ளவர்கள் இப்பாதைக்கு வரவேற்கப்படுகிறார்கள்.
*தன்வந்திரி உபாசனை* :
இலட்சக்கணக்கான மக்கள் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள நிலையில் மனித குலத்தை காக்கும் நோக்கில் காக்கும் கடவுள் நாராயணரின் இரு சொரூபங்களான தன்வந்திரி மற்றும் சூரிய பகவானின் உபாசனைகள் இப்போது வழங்கப்படுகிறது.
தன்வந்திரி உபாசனை மூலமாக நீண்ட ஆயுளுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை வரதானமாக
கிடைக்கும்.
அழைக்க:
கிருஷ்ணதாசர்
9361062620